Friday, April 11, 2008

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒழிகை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கு என்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கு என்றும் அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகு குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தங்கலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

No comments: